Holy Trinity

Holy Trinity

Friday, March 9, 2012


ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த

// ஸ்ரீ முகுந்த மாலா //


ஸ்லோகம் - 7

க்ருஷ்ண த்வதீய பத பங்கஜ பஞ்ஜராந்தம்
அத்யைவ மே விஸது மானஸ ராஜ ஹம்ஸ: /
ப்ராணப் ப்ரயாண ஸமயே கப வாத பித்தை:
கண்டா வரோதந விதௌ ஸ்மரணம் குதஸ் தே //


ஹே கிருஷ்ணா...! இப்பொழுதே என்னுடைய மனமாகிய ராஜ ஹம்சம் (அன்னப் பறவை) உன் திருவடித் தாமரைகளாகிய கூண்டில் புகுந்து (தஞ்சம் அடைந்து) கொள்ளட்டும். கபம், வாதம், பித்தம் போன்ற தோஷங்களால் ஏற்படும் (உடல் தளர்ச்சி, நினைவு தடுமாறுதல் ) உபாதைகளால் குரல் தடுமாறக் கூடிய மரண காலத்தில் (பிராணன் இவ்வுடலை விட்டு வெளியேறும் போது) உன்னை நான் எவ்வாறு நினைக்க முடியும்...?


(மனமும், உடலும் நல்ல நிலையில் உள்ள போதே, அதாவது இளமையிலேயே, பகவானுடைய சேவையில் அவற்றை ஈடு படுத்த முயல வேண்டும்.

'மனம் ஒரு குரங்கு' - மனமானது சதா அலை பாயும் தன்மையுடையது. அதனை அதன் போக்கில் விடாமல், கட்டுக்குள் வைக்க பழகிக் கொண்டால், இவ்வுலகில் எது உண்மை..? எது பொய்மை..? எது நிலையானது..? எது நிலையற்றது..? போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும். மனத்தை இளமையிலேயே அடக்கப் பழகாவிட்டால், அதை என்றுமே கட்டுக்குள் கொண்டு வர முடியாது.

மனித உடலானது பஞ்ச பூதங்களின் சேர்க்கையினால் ஆனது.
கபம் (நீர் + நிலம்) , வாதம் (காற்று + ஆகாயம்) , பித்தம் (நெருப்பு + நீர்) போன்றவைகளின் முறையற்ற கலவையே நோய்களுக்கு மூல காரணமாகின்றன. வயது ஏற ஏற, உடலில் நோய்களின் ஆதிக்கமும் அதிகமாகின்றது. )

No comments:

Post a Comment