ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த
// ஸ்ரீ முகுந்த மாலா //
ஸ்லோகம் - 8
சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம்
மந்த மந்த ஹஸிதாநநாம்புஜம் /
நந்த கோப தனயம் பராத்பரம்
நாரதாதி முனிப்ருந்த வந்திதம் //
நான் மனதில் எப்பொழுதும் பகவான் ஹரியையே தியானிக்கிறேன்...!
அவன் புன்முறுவல் பூக்கும் தாமரையைப் போன்ற திரு முகத்தையுடையவன்...!
அவனே நந்த கோபரின் குழந்தையாகத் திரு ஆயர்பாடியில் தோன்றியவன்...!
தேவ ரிஷியான நாரதர் போன்ற முனிவர்கள் போற்றி வணங்கும் பரம் பொருளாக விளங்குபவன்...!
(இறைவன் கற்பனைக்கு எட்டாத பரம்பொருளாக இருப்பவன். அந்தப் பரம்பொருளே, தன் பக்தனின் பக்திக்கு வசப்பட்டு, கருணையுடன் கூடிய, அழகிய ரூபம் தாங்கி, நாம் எந்த வடிவத்தில் அவனை வணங்குகிறோமோ, அதே கோலத்தில் நமக்கு காட்சியளிக்கிறான்.
அருவமாக, ஸர்வ வ்யாபியான, அந்த பரஜ்ஜோதி ஸ்வரூபனை தியானிப்பது அவ்வளவு எளிதானது அல்ல..! அனால், இறைவனை உருவக் கடவுளாக, நம் மனதிற்கு இஷ்டமான வடிவத்தில் தியானிப்பது சுலபம்..! குலசேகரர், இங்கு தியானிப்பது யசோதைக்கும், நந்த கோபருக்கும் குழந்தையாகத் தோன்றி, பரமானந்தத்தைத் தந்தவனான பகவான் ஸ்ரீ கிருஷ்ணனையே..! அவனே, நாரதர் போன்ற மகா முனிவர்கள் துதிக்கும் பரம்பொருள்...!)
அவன் புன்முறுவல் பூக்கும் தாமரையைப் போன்ற திரு முகத்தையுடையவன்...!
அவனே நந்த கோபரின் குழந்தையாகத் திரு ஆயர்பாடியில் தோன்றியவன்...!
தேவ ரிஷியான நாரதர் போன்ற முனிவர்கள் போற்றி வணங்கும் பரம் பொருளாக விளங்குபவன்...!
(இறைவன் கற்பனைக்கு எட்டாத பரம்பொருளாக இருப்பவன். அந்தப் பரம்பொருளே, தன் பக்தனின் பக்திக்கு வசப்பட்டு, கருணையுடன் கூடிய, அழகிய ரூபம் தாங்கி, நாம் எந்த வடிவத்தில் அவனை வணங்குகிறோமோ, அதே கோலத்தில் நமக்கு காட்சியளிக்கிறான்.
அருவமாக, ஸர்வ வ்யாபியான, அந்த பரஜ்ஜோதி ஸ்வரூபனை தியானிப்பது அவ்வளவு எளிதானது அல்ல..! அனால், இறைவனை உருவக் கடவுளாக, நம் மனதிற்கு இஷ்டமான வடிவத்தில் தியானிப்பது சுலபம்..! குலசேகரர், இங்கு தியானிப்பது யசோதைக்கும், நந்த கோபருக்கும் குழந்தையாகத் தோன்றி, பரமானந்தத்தைத் தந்தவனான பகவான் ஸ்ரீ கிருஷ்ணனையே..! அவனே, நாரதர் போன்ற மகா முனிவர்கள் துதிக்கும் பரம்பொருள்...!)
No comments:
Post a Comment