ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த
// ஸ்ரீ முகுந்த மாலா //
ஸ்லோகம் - 12
பவஜலதி கதாநாம் த்வந்த்வ வாதாஹதாநாம்
ஸுதது ஹித்ரு களத்ர த்ராண பாரார்த்திதாநாம் /
விஷம விஷய தோயே மஜ்ஜதா மப்லாவாநாம்
பவது ஸரண மேகோ விஷ்ணு போதோ நராணாம் //
ஸுதது ஹித்ரு களத்ர த்ராண பாரார்த்திதாநாம் /
விஷம விஷய தோயே மஜ்ஜதா மப்லாவாநாம்
பவது ஸரண மேகோ விஷ்ணு போதோ நராணாம் //
பிறப்பு இறப்பு என்பது தான் 'ஸம்சாரம்' என்கிற கடல்...! இந்த கரை காண முடியாத ஸம்சாரக் கடலில் சிக்கித் தவிக்கும் மக்களைத் தாக்கும் 'குளிரும் வெப்பமும் ' வாழ்க்கையில் அன்றாடம் அனுபவிக்கும் 'இன்பமும் துன்பமும்' ஆகும்...! இவர்களை, 'மனைவி, மக்கள், உறவினர்கள்' போன்ற சுமைகள் மேலும் மேலும் அழுத்துவதால், ஸம்சாரக் கடலில் இன்னும் ஆழ மூழ்குகின்றனர்...! உலக விஷயங்கள் என்ற நீர்ச் சுழலினால் இவர்கள் மேலும் அலைக் கழிக்கப் படுகின்றனர்...! படகு இல்லாமல் இந்த பயங்கரமான கடலில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் இவர்கள், கரை சேர முடியாமல் தவிக்கின்றனர், தத்தளிக்கின்றனர்...! இவர்களுக்கு பகவான் ஸ்ரீ விஷ்ணுவே படகாக ( ஓடமாக ) இருந்து கரையேற்றுகிறார்...!
( பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் 'பகவத் கீதை'யில் (2.38)
"ஸுக துக்கே ஸமே க்ருத்வா லாபா லாபௌ ஜெயா ஜயௌ" என்று கூறுகிறார்..
அதாவது, "சுகம் துக்கம்; லாபம் நஷ்டம்; வெற்றி தோல்வி; ஆகியவற்றை சமமாகக் கொள்ள வேண்டும்" என்கிறார்.
மேற்குறிப்பிட்ட இரட்டைகளை (சுகம் துக்கம்; லாபம் நஷ்டம்; வெற்றி தோல்வி) எதிர் கொள்ளாதவர் இந்த உலகத்தில் இல்லை...! 'இன்பம்' என்ற ஒன்று இருந்தால், 'துன்பம்' நிச்சயம் உண்டு...! யாரும் துன்பத்தை விரும்புவதில்லை...! இன்பத்தையே நாடுகின்றனர்...! இறைவனின் திருவடிகளில் தஞ்சம் அடைய விரும்புபவன், இவை இரண்டையும் சமமாகக் கருத வேண்டும்...! இன்பங்களில் நாட்டமும் கூடாது; அதுபோல, துன்பத்தைக் கண்டும் ஓடவும் கூடாது...! நமக்கு வாழ்க்கையில் என்ன கிடைக்கிறதோ, அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்படி எவன் வாழ்கிறானோ, அவனே முக்தி அடையத் தகுதி பெற்றவன்.
இவ்வாறு வாழ்வது என்பது, மேலோட்டமாகப் பார்த்தால் சுலபமாகத் தெரியலாம்...! பலர் இவ்வாறு கூறவும் கேட்டிருப்போம்...! அனால், இது அவ்வளவு சுலபமன்று...! இன்பங்களினால் மகிழாமலும், துன்பங்களினால் துவளாமலும் இருப்பது என்பது மிகவும் பக்குவப்பட்ட உயர்ந்த நிலை...! இது, யாரோ சிலருக்குத் தான் வாய்க்கிறது...!
ஸ்ரீ ராமானுஜர் தன் பகவத் கீதை உரையான 'ஸ்ரீ பாஷ்ய'த்தில்,
"தேஹா திரிக்தம் அஸ்ப்ருஷ்ட்ட ஸமஸ்த தேக ஸ்வபாவம் நித்யம் ஆத்மானம் ஜ்ஞாத்வா.." என்று இதை விளக்குகிறார்.
"எவன் ஒருவன் 'தன்னில் நிலை' பெற்றிருக்கிறானோ (அதாவது தான் வெறும் உடம்பு அல்ல, தான் ஒரு ஆத்மா என்று உணர்வது); மற்றும், இறைவனிடத்திலும் நிலை பெற்றிருக்கிறானோ (அதாவது, தன்னை இறைவனிடத்தில் ஒப்படைத்து, சரணாகதனாக வாழ்வது)".
அவனால் மட்டுமே சுகம் துக்கம்; லாபம் நஷ்டம்; வெற்றி தோல்வி; ஆகியவற்றை சமமாகக் கொள்ள முடியும்...! அவன் அன்றாட செயல்களையும், கடமைகளையும் பகவானிடத்தில் அர்ப்பணித்து விடுகிறான்; பகவானுக்காகவே செய்கிறான்; பகவானின் அருளை எண்ணியே அவன் வாழ்வானது கழிகிறது...! அவனுடைய வாழ்வு 'யோக வாழ்வாக' அமைகிறது...! இறைவனுக்காக செய்யப்படுகின்ற ஒன்று 'யோகம்' எனப்படுகிறது.
( பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் 'பகவத் கீதை'யில் (2.38)
"ஸுக துக்கே ஸமே க்ருத்வா லாபா லாபௌ ஜெயா ஜயௌ" என்று கூறுகிறார்..
அதாவது, "சுகம் துக்கம்; லாபம் நஷ்டம்; வெற்றி தோல்வி; ஆகியவற்றை சமமாகக் கொள்ள வேண்டும்" என்கிறார்.
மேற்குறிப்பிட்ட இரட்டைகளை (சுகம் துக்கம்; லாபம் நஷ்டம்; வெற்றி தோல்வி) எதிர் கொள்ளாதவர் இந்த உலகத்தில் இல்லை...! 'இன்பம்' என்ற ஒன்று இருந்தால், 'துன்பம்' நிச்சயம் உண்டு...! யாரும் துன்பத்தை விரும்புவதில்லை...! இன்பத்தையே நாடுகின்றனர்...! இறைவனின் திருவடிகளில் தஞ்சம் அடைய விரும்புபவன், இவை இரண்டையும் சமமாகக் கருத வேண்டும்...! இன்பங்களில் நாட்டமும் கூடாது; அதுபோல, துன்பத்தைக் கண்டும் ஓடவும் கூடாது...! நமக்கு வாழ்க்கையில் என்ன கிடைக்கிறதோ, அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்படி எவன் வாழ்கிறானோ, அவனே முக்தி அடையத் தகுதி பெற்றவன்.
இவ்வாறு வாழ்வது என்பது, மேலோட்டமாகப் பார்த்தால் சுலபமாகத் தெரியலாம்...! பலர் இவ்வாறு கூறவும் கேட்டிருப்போம்...! அனால், இது அவ்வளவு சுலபமன்று...! இன்பங்களினால் மகிழாமலும், துன்பங்களினால் துவளாமலும் இருப்பது என்பது மிகவும் பக்குவப்பட்ட உயர்ந்த நிலை...! இது, யாரோ சிலருக்குத் தான் வாய்க்கிறது...!
ஸ்ரீ ராமானுஜர் தன் பகவத் கீதை உரையான 'ஸ்ரீ பாஷ்ய'த்தில்,
"தேஹா திரிக்தம் அஸ்ப்ருஷ்ட்ட ஸமஸ்த தேக ஸ்வபாவம் நித்யம் ஆத்மானம் ஜ்ஞாத்வா.." என்று இதை விளக்குகிறார்.
"எவன் ஒருவன் 'தன்னில் நிலை' பெற்றிருக்கிறானோ (அதாவது தான் வெறும் உடம்பு அல்ல, தான் ஒரு ஆத்மா என்று உணர்வது); மற்றும், இறைவனிடத்திலும் நிலை பெற்றிருக்கிறானோ (அதாவது, தன்னை இறைவனிடத்தில் ஒப்படைத்து, சரணாகதனாக வாழ்வது)".
அவனால் மட்டுமே சுகம் துக்கம்; லாபம் நஷ்டம்; வெற்றி தோல்வி; ஆகியவற்றை சமமாகக் கொள்ள முடியும்...! அவன் அன்றாட செயல்களையும், கடமைகளையும் பகவானிடத்தில் அர்ப்பணித்து விடுகிறான்; பகவானுக்காகவே செய்கிறான்; பகவானின் அருளை எண்ணியே அவன் வாழ்வானது கழிகிறது...! அவனுடைய வாழ்வு 'யோக வாழ்வாக' அமைகிறது...! இறைவனுக்காக செய்யப்படுகின்ற ஒன்று 'யோகம்' எனப்படுகிறது.
No comments:
Post a Comment