Holy Trinity

Holy Trinity

Sunday, February 5, 2012


ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த

// ஸ்ரீ முகுந்த மாலா //


ஸ்லோகம் - 4


நாஹம் வந்தே தவசரணயோர் த்வந்த்வ மத்வந்த்வ ஹேதோ:
கும்பிபாகம் குருமபி ஹரே நாரகம் நாபநேதும் /
ரம்யா ராமா ம்ருதுதநுலதா நந்தநே நாபி ரந்தும்
பாவே பாவே ஹ்ருதய பவநே பாவயேயம் பவந்தம் //


ஹே ஹரி...! கொடிய பாவங்களை அழிப்பவனே...! மிகவும் திவ்யமானதும், தேவர்களால் கூட அடைய முடியாததுமாகிய, அந்த வைகுண்ட பதவியை அடைவதற்காகவோ, அல்லது நரக லோகத்திலுள்ள, மிகவும் கொடியதான, கும்பீபாகத்தில் தள்ளப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவோ, அல்லது சுவர்க்க லோகத்திலுள்ள நந்தவனத்தில், மிருதுவான மலர்க் கொடியைப் போன்ற உடலுடைய தேவலோகப் பெண்களை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவோ, நான் உன்னுடைய திருவடித் தாமரைகளை வணங்கவில்லை...! நான் எத்தனை பிறவி எடுத்தாலும், ஒவ்வொரு பிறப்பிலும், உன்னை என் இதயமாகிய கோவிலுக்குள்ளே வைத்து அனுதினமும் பூஜிக்க வேண்டும் என்பதற்காகவே உன் திருவடிகளை வணங்குகின்றேன்.

No comments:

Post a Comment