Holy Trinity

Holy Trinity

Friday, April 20, 2012


(ஸ்ரீ குலசேகர ஆழ்வார், ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில், காஞ்சிபுரம்)

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த 

//   ஸ்ரீ முகுந்த மாலா   //

ஸ்லோகம் - 40


யஸ்ய ப்ரியௌ ஸ்ருதிதரௌ கவிலோக வீரௌ
மித்ரே த்விஜன்ம வர பாரஸவா வபூதாம்  /
தேநாம்புஜாக்ஷ சரணாம்புஜ ஷட்பதேன
ராஜ்ஞா க்ருதா க்ருதிரியம் குலசேகரேண  //

தாமரை  இதழ்களைப்  போன்ற  கண்களையுடைய  எம்பெருமானான  ஸ்ரீ  க்ருஷ்ணனின்  திருவடித்  தாமரைகளின்  மீது  ஆழ்ந்த  பக்தி  பூண்ட  எந்த  குலசேகர  மன்னனுக்கு  கேள்வி  ஞானமுள்ளவர்களாகவும்,  சிறந்த  கவிகளாகவும்,  பெரும்  வீரர்களாகவும்,  அந்தண  மற்றும்  மிஸ்ர  குலத்தில்  பிறந்தவர்களான  ப்ரிய  நண்பர்கள்  இருவர்  இருந்தார்களோ,  அந்த  குலசேகர  மன்னனால்  இந்த  'முகுந்த மாலா'  ஸ்தோத்திரம்  இயற்றப்பட்டது. 


(இது  இந்த  ஸ்தோத்திரத்தின்  கடைசி  ஸ்லோகமாகும்.  இந்த  ஸ்லோகத்தின்  மூலம்  'முகுந்த  மாலா'  ஸ்தோத்திரம்  ஸ்ரீ  குலசேகர  மன்னனால்  இயற்றப்பட்டது  என்று  தெளிவு  படக்  கூறுகிறார். 

"மனமே..!! தன்னைவிட மேன்மை உடையவர் எவரும் இல்லை என்னும் படியும்; தன்னைவிட உயர்ந்த நலன்களை உடையவர் எவரும் இல்லை என்னும் படியும் உள்ளவர் எவரோ, அஞ்ஞானம் நீங்கப் பெற்ற தெளிந்த அறிவினை அருளும் வல்லமை உடையவர் எவரோ, தளர்விலா தேவர்களின் தலைவராக உள்ளவர் எவரோ, அத்தகைய பராக்ரமம் உடையவரின் ஒளி பொருந்தியதும், சரணடைந்த பக்தர்களின் துன்பத்தைப் போக்குவதுமான திருவடித் தாமரைகளை நாள்தோறும் பக்தியுடன் பணிந்து, அறியாமை என்னும் இருளிலிருந்து மீண்டு எழுவாயாக..!!" [திருவாய் மொழி 1-1-1 ] 

இந்த 'முகுந்த மாலை'யினை யாரெல்லாம் பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்கிறார்களோ, அவர்கள் இக பர சுகங்களை அளிப்பவனான ஸ்ரீ முகுந்தனின் அருளால் விஷ்ணு பக்தியும், அனைத்து செல்வங்களும் பெற்று இன்புறுவர் என்று கூறி இத்துடன் என் சிறிய உரையையும் முடிக்கிறேன். மேலும், இந்த அரிய ஸ்தோத்திரத்தை அடியேன் மேற்கொள்ளக் காரணமாய் இருந்த நண்பர்களுக்கு அடியேனுடைய நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

அவன் அருள் இருந்தால் மட்டுமே அனைத்தும் முடியும் என்பதனால், கண்ணன் கழலிணையே பற்றி, அவன் கருணா கடாக்ஷத்தையே வேண்டுகிறேன்.  அடியேனுடைய மொழிப் பெயர்ப்பில் இருக்கும் நிறைகளைக் கொண்டாட அடியேனுக்கு எந்த உரிமையும் கிடையாது. இதிலுள்ள தவறுகளுக்கு நானே முழு பொறுப்பு. ஏதேனும் குற்றம் குறை இருப்பின் அன்பர்கள் கருணை கூர்ந்து சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ள அடியேன் சித்தமாயிருக்கிறேன். )


ஸ்ரீ ராமகிருஷ்ண திருவடிகளே சரணம்....!!!

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த

// ஸ்ரீ முகுந்த மாலா //

ஸ்லோகம் - 39 

க்ஷீர ஸாகர தரங்க ஸீகராஸார தாரகித சாரு மூர்த்தயே /
போகி போக ஸயநீய ஸாயிநே மாதவாய மதுவித்விஷே நம: //

மது  என்னும்  அசுரனை  அழித்த,  நீல  மேக  ஷ்யாமள  வர்ணனான  ஸ்ரீமந்  நாராயணன்,  திருப்பாற்கடலில்  ஆதிசேஷனாகிய  பாம்பணையில்  பள்ளிகொண்டிருக்கிறார்...!! 

 பாற்கடலின்  அலைகளால்  சிதறிய  துளிகள்  அழகிய  மணவாளனின்  திருமேனியில்  பட்டு,  நீல  வானில்  பளிச்சிடும்  நக்ஷத்திரங்களைப்  போல  பிரகாசிக்கின்றன...!!  

இந்த  மாதவனாகிய  லக்ஷ்மிபதிக்கு  என்  நமஸ்காரங்கள்...!!


("இருளானது  விலகி  நீங்கும்படியாக,  ஒளிவீசும்  மாணிக்க  மணிகள்  விளங்குகின்ற  நெற்றியையும்,  அழகான  புள்ளிகளையும்,  அழகான  ஆயிரம்  படங்களையும்  உடைய  ஆதிசேஷன்  என்னும்  பாம்பணையின்  மேல்  பள்ளி  கொண்டிருக்கிறான்  அழகிய  மணவாளன்  என்றும்,  பெரிய  பெருமாள்  என்றும்  போற்றப்படும்  திரு அரங்கநாதன்..!!  அவன்  எழுந்தருளியுள்ள  திருவரங்கமாகிய  திவ்ய  தேசத்தில்,  பொன்னி  என்று  பெயர்  படைத்த  காவிரிப் பெண்  தன்னுடைய  அலைக்கரங்களால்,  அப்பெருமானின்  திருவடிகளை  இதமாக  வருடுகின்றாள்..!!  இதனால்,  மிக்க  மகிழ்ச்சியடைந்து  பள்ளிகொண்டிருக்கும்  கருமணியை,  கோமளத்தை,  என்  கண்ணாரக்  கண்டு  களிப்பெய்தும்  நாள்  எந்த  நாளோ..?",  என்று  தன்  பெருமாள்  திருமொழிப்  பாசுரத்தில்  ஏங்குகிறார்  குலசேகரர்.) 

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த

//   ஸ்ரீ முகுந்த மாலா   //


ஸ்லோகம் - 38

த்யாயந்தியே விஷ்ணுமனந்தமவ்யயம்
ஹ்ருத்பத்மமத்யே ஸததம் வ்யவஸ்திதம்  /
சமாஹிதாநாம்    ஸததாபயப்ரதம்      
தேயாந்தி ஸித்திம் பரமாஞ்ச வைஷ்ணவீம்  //



பகவான்  ஸ்ரீ  விஷ்ணு  முடிவில்லாதவர்...!   
 
எப்பொழுதும்  என்  இதயத்  தாமரையில்  நிலைத்திருப்பவர்...!    

புலன்களை  அடக்கிய  தன்  அடியார்களுக்கு  அபாயம்  அளிப்பவர்...!    

இவ்வாறான  பெருமைகளை  உடைய   ஸ்ரீமந்  நாராயணனை  தியானிப்பவர்கள்   மிகவும்   மேலானதான  ஸ்ரீ வைகுண்ட  லோகத்தினை  அடைவார்கள்...! 


( இறைவன் எல்லா உயிர்களிலும் நிறைந்துள்ளார். இதையே, பகவத் கீதையில்  ஸ்ரீ கிருஷ்ணர், 

"ஈஸ்வர  சர்வ  பூதானாம்  ஹ்ருத்தேசேர்ஜன  திஷ்டதி"  (கீதை-18.61) , 
"அர்ஜுனா..!  இறைவன்  அனைத்து  உயிர்களின்  இதயத்திலும்  இருக்கிறார்",  என்று  கூறுகிறார்.  மேலும், 

"தமேவ  சரணம்  கச்ச  ஸர்வ  பாவேன  பாரத  
தத்  ப்ரஸாதாத்  பராம்சாந்திம்  ஸ்தானம்  ப்ராப்ஸ்யஸி  சாஸ்வதம்"
(கீதை-18.62) 

"அர்ஜுனா,  இவ்வுலக  ஆசைகளைத்  துறந்து,  இறைவனையே  தியானித்து,  எல்லா  விதத்திலும்  அவனையே  சரணடைபவர்கள்,  அவனது  அருளால்  மேலான  அமைதியையும்  அழிவில்லாத  நிலையையும்  அடைவார்கள்",  என்று  உரைக்கிறார்.  மேலும், 

" மன்மனா  பவ  மத்  பக்தோ  மத்யாஜீ  மாம்  நமஸ்குரூ 
மாமேவைஷ்யசி  ஸத்யம்  தே  ப்ரதிஜானே  ப்ரியோஸி  மே"   (கீதை-18.65)
" என்னிடம்  உன்  மனத்தினை  வைத்திரு,  என்னுடைய  பக்தனாக  என்றும்  இரு,  என்னை  என்றும்  வழிபடு,  என்னையே  அடைவாய்.  உனக்கு  சத்தியம்  செய்து  உறுதி  கூறுகிறேன்.  நீ  எனக்கு  பிரியமானவன்",  என்று  சத்தியப்  பிரமாணமாக  இதனை  ஸ்ரீ கிருஷ்ணர்  கூறுகிறார். 

எனவே,  நாம்  செய்ய  வேண்டியது  என்னவென்றால்,  உலகத்தில்  எதனிலும்  பற்றில்லாமல்,  தாமரை  இலை  மேல்  நீர்த்துளி  போல  வாழ்ந்து,  பலன்களை  எதிர்பாராமல்  கடமையைச்  செய்து,  மன  உறுதியுடனும்,  நம்பிக்கையுடனும்,  இறைவனை  நம்  செயல்களின்  மூலமாக  வழிபட்டு,  பக்தியுடன்  அவனை  வணங்கினால்,  நாம்  அவனை  அடைவது  உறுதி. 

இறைவனுடைய  வாக்கு  என்றும்  பொய்யாவதில்லை..!  திரௌபதியிடம்  ஸ்ரீ கிருஷ்ணர்,  "ஹே  திரௌபதி,  ஆகாயம்  இடிந்து  கீழே  விழலாம்;  பூமி  தூள்  தூளாகலாம்;  இமய  மலை  பொடிப்  பொடியாகலாம்;  ஆனால்,  என்  வார்த்தை  என்றும்  வீணாகாது",  என்று  கூறுகிறார். 

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த

//   ஸ்ரீ முகுந்த மாலா   //

ஸ்லோகம் - 36

ஸ்ரீ நாத நாராயண வாஸுதேவ
ஸ்ரீ க்ருஷ்ண பக்தப்ரிய சக்ரபாணே  /
ஸ்ரீ பத்மநாபாச்யுத கைடபாரே
ஸ்ரீ ராம பத்மாக்ஷ ஹரே முராரே  //


ஸ்லோகம் - 37

அனந்த வைகுண்ட முகுந்த க்ருஷ்ண
கோவிந்த தாமோதர மாதவேதி  /
வக்தும் ஸமர்த்தோபி ந வக்தி கஸ்சித்
அஹோ ஜநாநாம் வ்யஸநாபி முக்யம்  //

(மேலே  கண்ட  இரு  ஸ்லோகங்களாலும்  பகவானுடைய  பற்பல  நாமங்களை  கூறுகிறார்  ஸ்ரீ  குலசேகர  ஆழ்வார்.)


ஸ்ரீ நாதா  (மஹா லக்ஷ்மியின் மணாளன்),  நாராயணன்  (அனைத்து  ஜீவராசிகளுக்கும்  புகலிடமாக  விளங்குபவன்),  வாசுதேவன்  (வசுதேவரின்  புதல்வனாக  தோன்றிய  கண்ணன்),  ஸ்ரீ கிருஷ்ணன்,  பக்தப்ரியன்  (தன் பக்தர்களிடம் மிகுந்த அருளைப் பொழிபவன்),  சக்ரபாணி  (சுதர்சன சக்கரத்தை ஏந்தியவன்),  ஸ்ரீ பத்மநாபன் (நாபிக் கமலத்தில்  தாமரை  மலரை  உடையவன்),  அச்சுதன்  (அழிவில்லாதவன்),  கைடபாரி  (கைடபன்  என்ற  அசுரனைக்  கொன்றவன்),  ஸ்ரீ ராமன்,  பத்மாக்ஷன்  (தாமரை  இதழைப்  போன்ற  அழகிய  கண்களை  உடையவன்),  ஹரி  (நம்  பாவங்களை  அழிப்பவன்;  சம்சாரமாகிய  துன்பத்தைப்  போக்குபவன்),  முராரி  (முரன்  என்ற  அசுரனை  சம்ஹரித்தவன்)..!!!

அனந்தா  (முடிவில்லாதவன்),  வைகுந்தா  (வைகுந்தத்தின் தலைவன்),   முகுந்தா  (முக்தியை  அருளுபவன்),  கிருஷ்ணா,  கோவிந்தா  (பசுக்களைக் (அ) ஜீவர்களை ரக்ஷிப்பவன்),  தாமோதரா  (தன்  தாய்  யசோதையால்  தாம்புக்  கையிற்றால்  வயிற்றில்  கட்டப்பட்டதால்  உண்டான  தழும்பை  உடையவன்),  மாதவா  (திருமகள் நாதன்)  இவ்வாறு  பகவானுடைய   பல்வேறு  திவ்ய  மங்கள  நாமங்களைக்  கூறும்  திறமை  இருந்தும்,  மக்கள் அனைவரும்  இவ்வுலக  சிற்றின்பங்களிலும்,  பந்தங்களிலும்  சிக்கித்  தவிக்கின்றார்களே...!!!   இது  மிகுந்த  வியப்பாக  உள்ளதே..!!!

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த

//   ஸ்ரீ முகுந்த மாலா   //

ஸ்லோகம் - 35 


நமாமி  நாராயண  பாத  பங்கஜம் 
கரோமி  நாராயண  பூஜனம்  ஸதா       /
வதாமி  நாராயண  நாம  நிர்மலம் 
ஸ்மராமி நாராயண தத்வமவ்யயம்     //



நான் சதா சர்வ காலமும் ஸ்ரீமாந் நாராயணனின் திருவடித் தாமரைகளையே வணங்குகிறேன்...! 

நான் எப்பொழுதும் அவனையே பூஜிக்கிறேன்...!  

நான் எப்பொழுதும் அவனுடைய குறை எதுமில்லாத அவனுடைய நாமமான 'ஸ்ரீமந்  நாராயண' என்பதையே ஜபிக்கிறேன்...! 

நான் என்றென்றும் 'நாராயண' என்ற தத்துவப் பொருளையே சிந்திக்கிறேன்...!

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த



//   ஸ்ரீ முகுந்த மாலா   //

ஸ்லோகம் - 34 

தத்த்வம்  ப்ரஸீத  பகவந்  குரு  மைய்யநாதே
விஷ்ணோ  க்ருபாம்  பரமகாருணிக:  கில த்வம் /
சம்ஸார  ஸாகர  நிமக்நம்  அனந்த  தீனம்  
உத்தர்த்துமர்ஹஸி  ஹரே  புருஷோத்தமோஸி // 


ஹே  பகவானே...!   

ஸ்ரீ  விஷ்ணுவாகிய  எம்பெருமானே...!


ஆதி  அந்தம்  இல்லாத  ஹரியே...!   

நீயே  புருஷோத்தமன்...!

நீயே  கருணையுள்ளம்  படைத்த  பரம  காருணிகனாக  
விளங்குபவன்...!


நீ  எனக்கு  அருள்  புரிய  வேண்டும்...!   

கரை  ஏற  வழியில்லாமல்  பிறவிப்  பெருங்கடலில்  மூழ்கித்  தத்தளித்துக்  கொண்டிருக்கும்  தீனனான  என்னை   நீ தான்  கரையேற்ற  வேண்டும்...!  

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த


// ஸ்ரீ முகுந்த மாலா //


ஸ்லோகம் - 33

க்ருஷ்ணோ ரக்ஷது நோ ஜகத்த்ரய குரு: க்ருஷ்ணம் நமஸ்யாம்யஹம்
க்ருஷ்ணே நாமர ஸத்ரவோ விநிஹதா: க்ருஷ்ணாய துப்யம் நம: /
க்ருஷ்ணாதேவ ஸமுத்திதம் ஜகதிதம் க்ருஷ்ணஸ்ய தாஸோஸ்ம்யஹம்
க்ருஷ்ணே திஷ்டதி ஸர்வமேததகிலம் ஹே க்ருஷ்ண ரக்ஷஸ்வமாம் //



கிருஷ்ணன் மூன்று  லோகங்களுக்கும்  நாயகனான  இருந்து நம்மையெல்லாம்  காக்கிறான்...! 


கிருஷ்ணனை  நான்  நமஸ்கரிக்கிறேன்...! 

கிருஷ்ணனால்  தேவர்களுடைய  பகைவர்களான  அனைத்து  அசுரர்களும்  அழிக்கப்பட்டனர்...! 

கிருஷ்ணனிடம்  இருந்தே  இந்த  பூவுலகம்  தோன்றியது...! 

கிருஷ்ணனின்  தாசனாக  நான்  என்றும் இருப்பேன்...! 

கிருஷ்ணனிடத்தில்  அனைத்தும்  நிலை  பெற்றிருக்கிறது...! 

ஹே  கிருஷ்ணா...!  என்னை  ரக்ஷிப்பாயாக...! 


ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த
// ஸ்ரீ முகுந்த மாலா //


ஸ்லோகம் - 32

தாரா வாராகர வரஸுதா தே தநூஜோ விரிஞ்சி:
ஸ்தோதா வேதஸ் தவ ஸுரகணோ ப்ருத்யவர்க்க: ப்ரஸாத: /
முக்திர் மாயா ஜகதவிகலம் தாவகீ தேவகி தே
மாதா மித்ரம் வலரிபுஸுதஸ் த்வய்யதேந்யந்ந ஜாநே //

என் இறைவா..!

உன் மனைவி கடலரசன் மகளான ஸ்ரீ மஹா லக்ஷ்மி...! 

உன் மகன் நான்முகனான பிரம்மன்...!

உன் புகழ் பாடுவதோ வேதங்கள்...!

உன் பணியாளர்களே தேவர்கள்...!

உன் அனுக்ரஹத்தினால் கிடைப்பதே மோக்ஷம்...!

உன் மாயையே  இந்த உலகம்...!

உன் தாய் தேவகி...!

உன் நண்பன் இந்திரன் மகனான அர்ஜுனன்...!

இவைகளைத் தவிர உன்னைப் பற்றி நான் வேறொன்றையும் 
அறியேன்...! 


ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த
// ஸ்ரீ முகுந்த மாலா //


ஸ்லோகம் - 31

இதம்  ஸரீரம்  பரிணாம  பேஸலம்  பதத்ய  வஸ்யம்  ஸ்லத  ஸந்தி  ஜர்ஜரம்   /
கிமௌஷதை: க்லிஸ்யதி  மூடதுர்மதே  நிராமயம்  க்ருஷ்ண ரஸாயநம்  பிப //

ஹே மூடனே...! துர் மதியே...!

இந்த  உடலானது  முதுமையினால்  வாடி  இளைத்து,  பூட்டுக்கள்  எல்லாம்  தளர்ந்து  ஒருநாள்  அழியப்  போவது  நிச்சயம்...!   இதை  யாராலும்  தவிர்க்கவோ,  தடுக்கவோ  முடியாது...!   அதனால்,  இந்த  அழியப்  போகும்  உடலைப்  பேணுவதற்காக  பற்பல  மருந்துகளையெல்லாம்  அருந்த  வேண்டாம்.  மிகவும்  உயர்ந்த  மருந்தான  'ஸ்ரீ க்ருஷ்ண'  நாமத்தை  அருந்தினாலே  போதுமானது...! 

Wednesday, April 11, 2012


ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த


//   ஸ்ரீ முகுந்த மாலா   //


ஸ்லோகம் - 30

தத்த்வம்  ப்ருவாணாநி  பரம்  பரஸ்மாத்
மது  க்ஷரந்தீவ  ஸதாம்  பலாநி   /
ப்ராவர்த்தய  ப்ராஞ்ஜலிரஸ்மி  ஜிஹ்வே
நாமாநி  நாராயண கோசாராணி //

ஹே  நாக்கே...!

நான்  உன்னை  வணங்கிக்  கேட்டுக்  கொள்கிறேன்...!   

ஸ்ரீமந்  நாராயணனின்  திவ்ய  நாமங்களையே  என்றென்றும்  உச்சரித்துக்  கொண்டிருப்பாயாக...!   

அவனுடைய  நாமங்கள்  அனைத்தும்,  உயர்ந்தனவற்றுள்  மிக  உயந்ததான,  மேலான  உண்மைப்  பொருளைப்  பற்றி  கூறுகின்றன...! 

அந்  நாமங்கள்  தேன் அருவியைப்  போன்றவை...!   

உயர்ந்தோர்களும்,  நல்லோர்களும்  விரும்பும்  பலன்களும்  அந்  நாமங்களே...!  


ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த

//   ஸ்ரீ முகுந்த மாலா   //


ஸ்லோகம் - 29

மதன  பரிஹர  ஸ்திதிம்  மதியே  மனஸி  முகுந்த  பாதாரவிந்த  தாம்நி /
ஹரநயன க்ருஷாநுனா க்ருஷோஸி ஸ்மரஸி ந சக்ர பராக்ரமம் முராரே://  


மன்மதனே...!  என்  இறைவனாகிய  முகுந்தனின்  திருவடித்  தாமரைகள்  என்றென்றும்  இருக்குமிடமான  என்னுடைய  இதயத்தில்  நீ  இருக்கும்   எண்ணத்தை  அடியோடு  விட்டு  விடு...!   இதற்கு  முன்னரே  சிவ  பெருமானுடைய  கோபத்திற்கு  காரணமாகி,  அவருடைய  நெற்றிக் கண்ணின்  தீ  ஜ்வாலைகளால்  எரிக்கப்பட்டு  அழிந்திருக்கிறாய்...!  என் முராரியின்  (நாராயணனின்)  சுதர்ஸன  சக்கரத்தின்  பராக்ரமத்தை  மறந்து  விட்டாயா...? 


(முரன் என்ற அசுரனை கிருஷ்ணர் அழித்ததால் அவருக்கு முராரி என்ற திருநாமம்)

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த


//   ஸ்ரீ முகுந்த மாலா   //


ஸ்லோகம் - 28 


நாதே  ந:  புருஷோத்தமே  த்ரிஜகதாமேகாதிபே  சேதஸா 
ஸேவ்யே  ஸ்வஸ்ய  பதஸ்ய  தாதரிஸுரே  நாராயணே  திஷ்டதி /
யம்  கஞ்சித்  புருஷாதமம்  கதிபயக்ராமேஸமல்பார்த்ததம்
சேவாயை   ம்ருகயாமஹே   நரமஹோ   மூகா   வராகா   வயம்   // 



புருஷோத்தமனான  ஸ்ரீமந்  நாராயணன்  மூவுலகுக்கும்  தலைவன்  ஆவான்...!   நம்  மனத்தினால்  அவனுக்கு  பக்தி  செய்தால்,  அது  ஒன்றே  போதுமானது;  தன்  இருப்பிடத்தையே  நமக்கு  கொடுத்து  விடுவான்...!  இப்படிப்பட்ட  தீன  ரக்ஷகனாக  எம்பெருமான்  நமக்காக  இருக்கும் போது  அல்பத்தனமான , சாதாரணமான  மனிதர்களை  துதி  செய்து,  சேவகம்  பார்த்துக்  கொண்டிருக்கிறோமே...!  நாம்  தான்  எவ்வளவு  மூடர்கள்...!  அற்பமானவர்கள்...!