ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த
// ஸ்ரீ முகுந்த மாலா //
ஸ்லோகம் - 38
த்யாயந்தியே விஷ்ணுமனந்தமவ்யயம்
ஹ்ருத்பத்மமத்யே ஸததம் வ்யவஸ்திதம் /
சமாஹிதாநாம் ஸததாபயப்ரதம்
தேயாந்தி ஸித்திம் பரமாஞ்ச வைஷ்ணவீம் //
ஹ்ருத்பத்மமத்யே ஸததம் வ்யவஸ்திதம் /
சமாஹிதாநாம் ஸததாபயப்ரதம்
தேயாந்தி ஸித்திம் பரமாஞ்ச வைஷ்ணவீம் //
பகவான் ஸ்ரீ விஷ்ணு முடிவில்லாதவர்...!
எப்பொழுதும் என் இதயத் தாமரையில் நிலைத்திருப்பவர்...!
புலன்களை
அடக்கிய தன் அடியார்களுக்கு அபாயம் அளிப்பவர்...!
இவ்வாறான
பெருமைகளை உடைய ஸ்ரீமந் நாராயணனை தியானிப்பவர்கள் மிகவும்
மேலானதான ஸ்ரீ வைகுண்ட லோகத்தினை அடைவார்கள்...!
( இறைவன் எல்லா உயிர்களிலும் நிறைந்துள்ளார். இதையே, பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர்,
"ஈஸ்வர சர்வ பூதானாம் ஹ்ருத்தேசேர்ஜன திஷ்டதி" (கீதை-18.61) ,
"அர்ஜுனா..! இறைவன் அனைத்து உயிர்களின் இதயத்திலும் இருக்கிறார்", என்று கூறுகிறார். மேலும்,
"தமேவ சரணம் கச்ச ஸர்வ பாவேன பாரத
தத் ப்ரஸாதாத் பராம்சாந்திம் ஸ்தானம் ப்ராப்ஸ்யஸி சாஸ்வதம்"
(கீதை-18.62)
"அர்ஜுனா,
இவ்வுலக ஆசைகளைத் துறந்து, இறைவனையே தியானித்து, எல்லா விதத்திலும்
அவனையே சரணடைபவர்கள், அவனது அருளால் மேலான அமைதியையும் அழிவில்லாத
நிலையையும் அடைவார்கள்", என்று உரைக்கிறார். மேலும்,
" மன்மனா பவ மத் பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரூ
மாமேவைஷ்யசி ஸத்யம் தே ப்ரதிஜானே ப்ரியோஸி மே" (கீதை-18.65)
" என்னிடம் உன் மனத்தினை வைத்திரு,
என்னுடைய பக்தனாக என்றும் இரு, என்னை என்றும் வழிபடு, என்னையே
அடைவாய். உனக்கு சத்தியம் செய்து உறுதி கூறுகிறேன். நீ எனக்கு
பிரியமானவன்", என்று சத்தியப் பிரமாணமாக இதனை ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்.
எனவே, நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், உலகத்தில் எதனிலும் பற்றில்லாமல், தாமரை இலை மேல் நீர்த்துளி போல வாழ்ந்து, பலன்களை எதிர்பாராமல் கடமையைச்
செய்து, மன உறுதியுடனும், நம்பிக்கையுடனும், இறைவனை நம் செயல்களின்
மூலமாக வழிபட்டு, பக்தியுடன் அவனை வணங்கினால், நாம் அவனை அடைவது
உறுதி.
இறைவனுடைய வாக்கு என்றும் பொய்யாவதில்லை..! திரௌபதியிடம் ஸ்ரீ கிருஷ்ணர், "ஹே
திரௌபதி, ஆகாயம் இடிந்து கீழே விழலாம்; பூமி தூள் தூளாகலாம்; இமய
மலை பொடிப் பொடியாகலாம்; ஆனால், என் வார்த்தை என்றும் வீணாகாது", என்று கூறுகிறார்.
No comments:
Post a Comment