ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த
// ஸ்ரீ முகுந்த மாலா //
ஸ்லோகம் - 39
க்ஷீர ஸாகர தரங்க ஸீகராஸார தாரகித சாரு மூர்த்தயே /
போகி போக ஸயநீய ஸாயிநே மாதவாய மதுவித்விஷே நம: //
மது என்னும் அசுரனை அழித்த,
நீல மேக ஷ்யாமள வர்ணனான ஸ்ரீமந் நாராயணன், திருப்பாற்கடலில்
ஆதிசேஷனாகிய பாம்பணையில் பள்ளிகொண்டிருக்கிறார்...!!
பாற்கடலின்
அலைகளால் சிதறிய துளிகள் அழகிய மணவாளனின் திருமேனியில் பட்டு, நீல
வானில் பளிச்சிடும் நக்ஷத்திரங்களைப் போல பிரகாசிக்கின்றன...!!
இந்த
மாதவனாகிய லக்ஷ்மிபதிக்கு என் நமஸ்காரங்கள்...!!
("இருளானது விலகி நீங்கும்படியாக,
ஒளிவீசும் மாணிக்க மணிகள் விளங்குகின்ற நெற்றியையும், அழகான
புள்ளிகளையும், அழகான ஆயிரம் படங்களையும் உடைய ஆதிசேஷன் என்னும்
பாம்பணையின் மேல் பள்ளி கொண்டிருக்கிறான் அழகிய மணவாளன் என்றும்,
பெரிய பெருமாள் என்றும் போற்றப்படும் திரு அரங்கநாதன்..!! அவன்
எழுந்தருளியுள்ள திருவரங்கமாகிய திவ்ய தேசத்தில், பொன்னி என்று
பெயர் படைத்த காவிரிப் பெண் தன்னுடைய அலைக்கரங்களால், அப்பெருமானின்
திருவடிகளை இதமாக வருடுகின்றாள்..!! இதனால், மிக்க மகிழ்ச்சியடைந்து
பள்ளிகொண்டிருக்கும் கருமணியை, கோமளத்தை, என் கண்ணாரக் கண்டு
களிப்பெய்தும் நாள் எந்த நாளோ..?", என்று தன் பெருமாள் திருமொழிப்
பாசுரத்தில் ஏங்குகிறார் குலசேகரர்.)
No comments:
Post a Comment