Holy Trinity

Holy Trinity

Friday, April 20, 2012


ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த

//   ஸ்ரீ முகுந்த மாலா   //

ஸ்லோகம் - 36

ஸ்ரீ நாத நாராயண வாஸுதேவ
ஸ்ரீ க்ருஷ்ண பக்தப்ரிய சக்ரபாணே  /
ஸ்ரீ பத்மநாபாச்யுத கைடபாரே
ஸ்ரீ ராம பத்மாக்ஷ ஹரே முராரே  //


ஸ்லோகம் - 37

அனந்த வைகுண்ட முகுந்த க்ருஷ்ண
கோவிந்த தாமோதர மாதவேதி  /
வக்தும் ஸமர்த்தோபி ந வக்தி கஸ்சித்
அஹோ ஜநாநாம் வ்யஸநாபி முக்யம்  //

(மேலே  கண்ட  இரு  ஸ்லோகங்களாலும்  பகவானுடைய  பற்பல  நாமங்களை  கூறுகிறார்  ஸ்ரீ  குலசேகர  ஆழ்வார்.)


ஸ்ரீ நாதா  (மஹா லக்ஷ்மியின் மணாளன்),  நாராயணன்  (அனைத்து  ஜீவராசிகளுக்கும்  புகலிடமாக  விளங்குபவன்),  வாசுதேவன்  (வசுதேவரின்  புதல்வனாக  தோன்றிய  கண்ணன்),  ஸ்ரீ கிருஷ்ணன்,  பக்தப்ரியன்  (தன் பக்தர்களிடம் மிகுந்த அருளைப் பொழிபவன்),  சக்ரபாணி  (சுதர்சன சக்கரத்தை ஏந்தியவன்),  ஸ்ரீ பத்மநாபன் (நாபிக் கமலத்தில்  தாமரை  மலரை  உடையவன்),  அச்சுதன்  (அழிவில்லாதவன்),  கைடபாரி  (கைடபன்  என்ற  அசுரனைக்  கொன்றவன்),  ஸ்ரீ ராமன்,  பத்மாக்ஷன்  (தாமரை  இதழைப்  போன்ற  அழகிய  கண்களை  உடையவன்),  ஹரி  (நம்  பாவங்களை  அழிப்பவன்;  சம்சாரமாகிய  துன்பத்தைப்  போக்குபவன்),  முராரி  (முரன்  என்ற  அசுரனை  சம்ஹரித்தவன்)..!!!

அனந்தா  (முடிவில்லாதவன்),  வைகுந்தா  (வைகுந்தத்தின் தலைவன்),   முகுந்தா  (முக்தியை  அருளுபவன்),  கிருஷ்ணா,  கோவிந்தா  (பசுக்களைக் (அ) ஜீவர்களை ரக்ஷிப்பவன்),  தாமோதரா  (தன்  தாய்  யசோதையால்  தாம்புக்  கையிற்றால்  வயிற்றில்  கட்டப்பட்டதால்  உண்டான  தழும்பை  உடையவன்),  மாதவா  (திருமகள் நாதன்)  இவ்வாறு  பகவானுடைய   பல்வேறு  திவ்ய  மங்கள  நாமங்களைக்  கூறும்  திறமை  இருந்தும்,  மக்கள் அனைவரும்  இவ்வுலக  சிற்றின்பங்களிலும்,  பந்தங்களிலும்  சிக்கித்  தவிக்கின்றார்களே...!!!   இது  மிகுந்த  வியப்பாக  உள்ளதே..!!!

No comments:

Post a Comment