ஸ்லோகம் - 34
தத்த்வம் ப்ரஸீத பகவந் குரு மைய்யநாதே
விஷ்ணோ க்ருபாம் பரமகாருணிக: கில த்வம் /
சம்ஸார ஸாகர நிமக்நம் அனந்த தீனம்
உத்தர்த்துமர்ஹஸி ஹரே புருஷோத்தமோஸி //
ஹே பகவானே...!
ஸ்ரீ விஷ்ணுவாகிய எம்பெருமானே...!
ஆதி அந்தம் இல்லாத ஹரியே...!
நீயே புருஷோத்தமன்...!
நீயே கருணையுள்ளம் படைத்த பரம காருணிகனாக
விளங்குபவன்...!
நீ எனக்கு அருள் புரிய வேண்டும்...!
கரை ஏற வழியில்லாமல் பிறவிப்
பெருங்கடலில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருக்கும் தீனனான என்னை நீ
தான் கரையேற்ற வேண்டும்...!
No comments:
Post a Comment