Holy Trinity

Holy Trinity

Friday, April 20, 2012


ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த


// ஸ்ரீ முகுந்த மாலா //


ஸ்லோகம் - 33

க்ருஷ்ணோ ரக்ஷது நோ ஜகத்த்ரய குரு: க்ருஷ்ணம் நமஸ்யாம்யஹம்
க்ருஷ்ணே நாமர ஸத்ரவோ விநிஹதா: க்ருஷ்ணாய துப்யம் நம: /
க்ருஷ்ணாதேவ ஸமுத்திதம் ஜகதிதம் க்ருஷ்ணஸ்ய தாஸோஸ்ம்யஹம்
க்ருஷ்ணே திஷ்டதி ஸர்வமேததகிலம் ஹே க்ருஷ்ண ரக்ஷஸ்வமாம் //



கிருஷ்ணன் மூன்று  லோகங்களுக்கும்  நாயகனான  இருந்து நம்மையெல்லாம்  காக்கிறான்...! 


கிருஷ்ணனை  நான்  நமஸ்கரிக்கிறேன்...! 

கிருஷ்ணனால்  தேவர்களுடைய  பகைவர்களான  அனைத்து  அசுரர்களும்  அழிக்கப்பட்டனர்...! 

கிருஷ்ணனிடம்  இருந்தே  இந்த  பூவுலகம்  தோன்றியது...! 

கிருஷ்ணனின்  தாசனாக  நான்  என்றும் இருப்பேன்...! 

கிருஷ்ணனிடத்தில்  அனைத்தும்  நிலை  பெற்றிருக்கிறது...! 

ஹே  கிருஷ்ணா...!  என்னை  ரக்ஷிப்பாயாக...! 

No comments:

Post a Comment