ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த
// ஸ்ரீ முகுந்த மாலா //
ஸ்லோகம் - 32
தாரா வாராகர வரஸுதா தே தநூஜோ விரிஞ்சி:
ஸ்தோதா வேதஸ் தவ ஸுரகணோ ப்ருத்யவர்க்க: ப்ரஸாத: /
முக்திர் மாயா ஜகதவிகலம் தாவகீ தேவகி தே
மாதா மித்ரம் வலரிபுஸுதஸ் த்வய்யதேந்யந்ந ஜாநே //
தாரா வாராகர வரஸுதா தே தநூஜோ விரிஞ்சி:
ஸ்தோதா வேதஸ் தவ ஸுரகணோ ப்ருத்யவர்க்க: ப்ரஸாத: /
முக்திர் மாயா ஜகதவிகலம் தாவகீ தேவகி தே
மாதா மித்ரம் வலரிபுஸுதஸ் த்வய்யதேந்யந்ந ஜாநே //
என் இறைவா..!
உன் மனைவி கடலரசன் மகளான ஸ்ரீ மஹா லக்ஷ்மி...!
உன் மகன் நான்முகனான பிரம்மன்...!
உன் புகழ் பாடுவதோ வேதங்கள்...!
உன் பணியாளர்களே தேவர்கள்...!
உன் அனுக்ரஹத்தினால் கிடைப்பதே மோக்ஷம்...!
உன் மாயையே இந்த உலகம்...!
உன் தாய் தேவகி...!
உன் நண்பன் இந்திரன் மகனான அர்ஜுனன்...!
இவைகளைத் தவிர உன்னைப் பற்றி நான் வேறொன்றையும்
அறியேன்...!
No comments:
Post a Comment