Holy Trinity

Holy Trinity

Friday, April 20, 2012


ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த
// ஸ்ரீ முகுந்த மாலா //


ஸ்லோகம் - 31

இதம்  ஸரீரம்  பரிணாம  பேஸலம்  பதத்ய  வஸ்யம்  ஸ்லத  ஸந்தி  ஜர்ஜரம்   /
கிமௌஷதை: க்லிஸ்யதி  மூடதுர்மதே  நிராமயம்  க்ருஷ்ண ரஸாயநம்  பிப //

ஹே மூடனே...! துர் மதியே...!

இந்த  உடலானது  முதுமையினால்  வாடி  இளைத்து,  பூட்டுக்கள்  எல்லாம்  தளர்ந்து  ஒருநாள்  அழியப்  போவது  நிச்சயம்...!   இதை  யாராலும்  தவிர்க்கவோ,  தடுக்கவோ  முடியாது...!   அதனால்,  இந்த  அழியப்  போகும்  உடலைப்  பேணுவதற்காக  பற்பல  மருந்துகளையெல்லாம்  அருந்த  வேண்டாம்.  மிகவும்  உயர்ந்த  மருந்தான  'ஸ்ரீ க்ருஷ்ண'  நாமத்தை  அருந்தினாலே  போதுமானது...! 

No comments:

Post a Comment