Holy Trinity

Holy Trinity

Wednesday, April 11, 2012


ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த


//   ஸ்ரீ முகுந்த மாலா   //


ஸ்லோகம் - 30

தத்த்வம்  ப்ருவாணாநி  பரம்  பரஸ்மாத்
மது  க்ஷரந்தீவ  ஸதாம்  பலாநி   /
ப்ராவர்த்தய  ப்ராஞ்ஜலிரஸ்மி  ஜிஹ்வே
நாமாநி  நாராயண கோசாராணி //

ஹே  நாக்கே...!

நான்  உன்னை  வணங்கிக்  கேட்டுக்  கொள்கிறேன்...!   

ஸ்ரீமந்  நாராயணனின்  திவ்ய  நாமங்களையே  என்றென்றும்  உச்சரித்துக்  கொண்டிருப்பாயாக...!   

அவனுடைய  நாமங்கள்  அனைத்தும்,  உயர்ந்தனவற்றுள்  மிக  உயந்ததான,  மேலான  உண்மைப்  பொருளைப்  பற்றி  கூறுகின்றன...! 

அந்  நாமங்கள்  தேன் அருவியைப்  போன்றவை...!   

உயர்ந்தோர்களும்,  நல்லோர்களும்  விரும்பும்  பலன்களும்  அந்  நாமங்களே...!  

No comments:

Post a Comment