Holy Trinity

Holy Trinity

Wednesday, April 11, 2012


ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த


//   ஸ்ரீ முகுந்த மாலா   //


ஸ்லோகம் - 28 


நாதே  ந:  புருஷோத்தமே  த்ரிஜகதாமேகாதிபே  சேதஸா 
ஸேவ்யே  ஸ்வஸ்ய  பதஸ்ய  தாதரிஸுரே  நாராயணே  திஷ்டதி /
யம்  கஞ்சித்  புருஷாதமம்  கதிபயக்ராமேஸமல்பார்த்ததம்
சேவாயை   ம்ருகயாமஹே   நரமஹோ   மூகா   வராகா   வயம்   // 



புருஷோத்தமனான  ஸ்ரீமந்  நாராயணன்  மூவுலகுக்கும்  தலைவன்  ஆவான்...!   நம்  மனத்தினால்  அவனுக்கு  பக்தி  செய்தால்,  அது  ஒன்றே  போதுமானது;  தன்  இருப்பிடத்தையே  நமக்கு  கொடுத்து  விடுவான்...!  இப்படிப்பட்ட  தீன  ரக்ஷகனாக  எம்பெருமான்  நமக்காக  இருக்கும் போது  அல்பத்தனமான , சாதாரணமான  மனிதர்களை  துதி  செய்து,  சேவகம்  பார்த்துக்  கொண்டிருக்கிறோமே...!  நாம்  தான்  எவ்வளவு  மூடர்கள்...!  அற்பமானவர்கள்...! 

No comments:

Post a Comment