// ஸ்ரீ முகுந்த மாலா //
ஸ்லோகம் - 28
நாதே ந: புருஷோத்தமே த்ரிஜகதாமேகாதிபே சேதஸா
ஸேவ்யே ஸ்வஸ்ய பதஸ்ய தாதரிஸுரே நாராயணே திஷ்டதி /
யம் கஞ்சித் புருஷாதமம் கதிபயக்ராமேஸமல்பார்த்ததம்
சேவாயை ம்ருகயாமஹே நரமஹோ மூகா வராகா வயம் //
புருஷோத்தமனான
ஸ்ரீமந் நாராயணன் மூவுலகுக்கும் தலைவன் ஆவான்...! நம் மனத்தினால்
அவனுக்கு பக்தி செய்தால், அது ஒன்றே போதுமானது; தன் இருப்பிடத்தையே
நமக்கு கொடுத்து விடுவான்...! இப்படிப்பட்ட தீன ரக்ஷகனாக
எம்பெருமான் நமக்காக இருக்கும் போது அல்பத்தனமான , சாதாரணமான
மனிதர்களை துதி செய்து, சேவகம் பார்த்துக் கொண்டிருக்கிறோமே...!
நாம் தான் எவ்வளவு மூடர்கள்...! அற்பமானவர்கள்...!
No comments:
Post a Comment