ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த
// ஸ்ரீ முகுந்த மாலா //
ஸ்லோகம் - 15
மாத்ராக்ஷம் க்ஷீண புண்யாந் க்ஷணமபி பவதோ பக்தி ஹீநாந் பதாப்ஜே
மாஸ்ரௌஷம் ஸ்ராவ்ய பந்தம் தவசரித மபாஸ்ய அந்யதாக்யாநஜாதம் /
மாஸ் மார்ஷம் மாதவ த்வாமபி புவன பதே சேதஸா பஹ்நு வாநாந்
மாபூவம் த்வத்ஸ பர்யா வ்யதிகர ரஹிதோ ஜன்ம ஜன்மாந்தரேபி //
ஹே லோகநாதா...! ஹே மாதவா...!இப்பிறவியிலும் மற்ற எந்த பிறவிகளிலும், உன் திருவடிகளை தொழுது பக்தி செய்யாத பாவிகளை என் கண்கள் பார்க்கக் கூடாது...! உன் திவ்ய சரிதங்களையும், லீலைகளையும் தவிர, வேறு உலகக் கதைகளை என் காதுகள் கேட்கக் கூடாது...! உன்னை வெறுப்பவர்களை, என் மனம் நினைக்கக் கூடாது...! நான் என்றென்றும் உனக்குப் பூஜை செய்யாதவனாக இருக்கக் கூடாது...!
(தீய எண்ணமும், நடத்தையும் உள்ளவருடன் வைக்கும் நட்பு, தீய பலனையே தரும். அது நம் மனதை இறைவனிடம் போக விடாமல், நம்மை நாமே அழித்துக் கொள்ள வழி செய்கிறது.
இதனாலேயே, சான்றோர்;
நல்லோர்களுடன் இணக்கமே 'சத் சங்கம்' எனப்படுகிறது. இது போன்ற சத் சங்கத்தினால், மனம் தூய்மையடைகிறது; நல்லெண்ணமே மேலெழுகிறது; நற் சிந்தனைகளால், நல்ல செயல்களே நடக்கிறது. இறை பக்திக்கு தேவை மனத் தூய்மையே. எவையெல்லாம் தன் புலன்களுக்குக் 'கூடாது' என்று கூறிய குலசேகரர், எது 'தேவை' என்று அடுத்த ஸ்லோகத்தில் தெரிவிக்கிறார். )
(தீய எண்ணமும், நடத்தையும் உள்ளவருடன் வைக்கும் நட்பு, தீய பலனையே தரும். அது நம் மனதை இறைவனிடம் போக விடாமல், நம்மை நாமே அழித்துக் கொள்ள வழி செய்கிறது.
இதனாலேயே, சான்றோர்;
'தீயாரைக் காண்பதுவும் தீதே; திருவற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது'
- என்று கூறியுள்ளனர். தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது'
நல்லோர்களுடன் இணக்கமே 'சத் சங்கம்' எனப்படுகிறது. இது போன்ற சத் சங்கத்தினால், மனம் தூய்மையடைகிறது; நல்லெண்ணமே மேலெழுகிறது; நற் சிந்தனைகளால், நல்ல செயல்களே நடக்கிறது. இறை பக்திக்கு தேவை மனத் தூய்மையே. எவையெல்லாம் தன் புலன்களுக்குக் 'கூடாது' என்று கூறிய குலசேகரர், எது 'தேவை' என்று அடுத்த ஸ்லோகத்தில் தெரிவிக்கிறார். )
No comments:
Post a Comment