ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த
// ஸ்ரீ முகுந்த மாலா //
ஸ்லோகம் - 18
ஹே மர்த்யா: பரமம் ஹிதம் ஸ்ருணுதவோ வக்ஷ்யாமி சங்க்ஷேபத:
ஸம்ஸாரார்ணவ மாபதூர்மி பகுளம் ஸம் யக் ப்ரவிஷ்ய ஸ்திதா:/
நாநா ஜ்யாத மபாஸ்ய சேதஸி நமோ நாராயணாயேத்யமும்
மந்த்ரம் ஸப்ரணவம் ப்ரணாம ஸஹிதம் ப்ராவர்த்தயத்வம் முஹு://
ஹே மர்த்யா: பரமம் ஹிதம் ஸ்ருணுதவோ வக்ஷ்யாமி சங்க்ஷேபத:
ஸம்ஸாரார்ணவ மாபதூர்மி பகுளம் ஸம் யக் ப்ரவிஷ்ய ஸ்திதா:/
நாநா ஜ்யாத மபாஸ்ய சேதஸி நமோ நாராயணாயேத்யமும்
மந்த்ரம் ஸப்ரணவம் ப்ரணாம ஸஹிதம் ப்ராவர்த்தயத்வம் முஹு://
ஹே மானிடர்களே...!
எண்ணற்ற ஆபத்துக்கள் சூழ்ந்த இந்த பிறவிப் பெருங்கடலில் மூழ்கித் தத்தளிக்கும் உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் மேன்மையான உபாயத்தைக் கூறுகிறேன்; கவனமாகக் கேளுங்கள்...! உலகத்தில் உள்ள, பலவிதமான விஷயங்களையெல்லாம் அறிந்து கொள்வதை விட்டு விட்டு 'ஓம்' என்னும் பிரணாவாகாரத்துடன் கூடிய திரு அஷ்டாக்ஷரமாகிய 'ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரத்தை வணங்கி மனதில் ஜபம் செய்து கொண்டே இருங்கள்...!
( ஒருவருக்கு, அவருக்குப் பிடித்ததைச் சொல்லுவது என்பது வேறு; அவருக்கு எது நல்லதோ அதைச் சொல்லுவது என்பது வேறு...! முதலாவது, அவரைத் திருப்திப் படுத்துவதற்கு; இரண்டாவது, அவரை நல்வழிப் படுத்துவதற்கு...! இங்கு, குலசேகரர் 'பரமம் ஹிதம் ஸ்ருணுதவோ வக்ஷ்யாமி', அதாவது 'மிகவும் உயர்ந்த நம்மையைக் கூறுகிறேன், கேளுங்கள்', என்று கூறுகிறார்.
திரு அஷ்டாக்ஷர மந்த்ரமானது அவ்வளவு உயர்ந்தது...! ஏன்..? எவ்வாறு..? ஏனெனில், அம்மந்த்ரம் ஸ்ரீமந் நாராயணனாலேயே உபதேசிக்கப் பட்டது...! மந்திரங்களுக்குள் தலைசிறந்ததாகக் கூறப்பட்டுள்ளது...! இம்மந்திரம், திருமங்கை ஆழ்வாருக்கு, பகவானால் உபதேசிக்கப்பட்டது..! அவர், தன் பெரிய திருமொழியில் 'குலம் தரும் செல்வந் தந்திடும்' என்ற பாசுரத்தில் கீழ்வருமாறு தெரிவிக்கிறார்;
" நாராயணா என்ற திருநாமத்தின் மகிமையே மகிமை..! அது என்னவெல்லாம் செய்யும் தெரியுமா..? தன்னை வணங்குபவர்க்கு உயர்ந்த கதியைத் தரும்; பெரும் செல்வத்தைக் கொடுக்கும்; தன் அடியவர்களின் துன்பங்களை ஒன்றுமில்லாமல் செய்து விடும்; மேலான பரமபதத்தை அளிக்கும்; நாம் எடுத்த காரியங்களில் வெற்றியையே கொடுக்கும்; நாம் விரும்பும் நன்மைகளைத் தரும்; பெற்றெடுத்த தாயை விட, நமக்கு நல்லதையே செய்யும்; இவ்வாறான, நன்மைகளையே தரும் 'நாராயணா' என்னும் திருமந்திரத்தை நான் இன்று கண்டு கொண்டேன்...!'
எண்ணற்ற ஆபத்துக்கள் சூழ்ந்த இந்த பிறவிப் பெருங்கடலில் மூழ்கித் தத்தளிக்கும் உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் மேன்மையான உபாயத்தைக் கூறுகிறேன்; கவனமாகக் கேளுங்கள்...! உலகத்தில் உள்ள, பலவிதமான விஷயங்களையெல்லாம் அறிந்து கொள்வதை விட்டு விட்டு 'ஓம்' என்னும் பிரணாவாகாரத்துடன் கூடிய திரு அஷ்டாக்ஷரமாகிய 'ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரத்தை வணங்கி மனதில் ஜபம் செய்து கொண்டே இருங்கள்...!
( ஒருவருக்கு, அவருக்குப் பிடித்ததைச் சொல்லுவது என்பது வேறு; அவருக்கு எது நல்லதோ அதைச் சொல்லுவது என்பது வேறு...! முதலாவது, அவரைத் திருப்திப் படுத்துவதற்கு; இரண்டாவது, அவரை நல்வழிப் படுத்துவதற்கு...! இங்கு, குலசேகரர் 'பரமம் ஹிதம் ஸ்ருணுதவோ வக்ஷ்யாமி', அதாவது 'மிகவும் உயர்ந்த நம்மையைக் கூறுகிறேன், கேளுங்கள்', என்று கூறுகிறார்.
திரு அஷ்டாக்ஷர மந்த்ரமானது அவ்வளவு உயர்ந்தது...! ஏன்..? எவ்வாறு..? ஏனெனில், அம்மந்த்ரம் ஸ்ரீமந் நாராயணனாலேயே உபதேசிக்கப் பட்டது...! மந்திரங்களுக்குள் தலைசிறந்ததாகக் கூறப்பட்டுள்ளது...! இம்மந்திரம், திருமங்கை ஆழ்வாருக்கு, பகவானால் உபதேசிக்கப்பட்டது..! அவர், தன் பெரிய திருமொழியில் 'குலம் தரும் செல்வந் தந்திடும்' என்ற பாசுரத்தில் கீழ்வருமாறு தெரிவிக்கிறார்;
" நாராயணா என்ற திருநாமத்தின் மகிமையே மகிமை..! அது என்னவெல்லாம் செய்யும் தெரியுமா..? தன்னை வணங்குபவர்க்கு உயர்ந்த கதியைத் தரும்; பெரும் செல்வத்தைக் கொடுக்கும்; தன் அடியவர்களின் துன்பங்களை ஒன்றுமில்லாமல் செய்து விடும்; மேலான பரமபதத்தை அளிக்கும்; நாம் எடுத்த காரியங்களில் வெற்றியையே கொடுக்கும்; நாம் விரும்பும் நன்மைகளைத் தரும்; பெற்றெடுத்த தாயை விட, நமக்கு நல்லதையே செய்யும்; இவ்வாறான, நன்மைகளையே தரும் 'நாராயணா' என்னும் திருமந்திரத்தை நான் இன்று கண்டு கொண்டேன்...!'
No comments:
Post a Comment