ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த
// ஸ்ரீ முகுந்த மாலா //
ஸ்லோகம் - 19
ப்ருத்வி ரேணுரணு: பயாம்ஸி கணிகா: பல்கு ஸ்புலிங்கோ நலஸ்
தேஜோ நிஸ்வஸநம் மருத்தநுதரம் ரந்த்ரம் ஸுஸூக்ஷ்மம் நப:/
க்ஷுத்ரா ருத்ர பிதாமஹ ப்ரப்ருதய: கீடா: ஸமஸ்தாஸ் ஸுரா:
த்ருஷ்டே யத்ர ஸ தாவகோ விஜயதே பூமாவ தூதாவதி: //
பகவானே...! உன்னுடைய உன்னதமான மகிமைகளையும், திவ்யமான லீலைகளையும் காணும் போது, இந்த பூமியானது மிகவும் சிறிய தூசி போலவும், மொத்த ஜலமும் ஒரு சிறு துளி போலவும், நெருப்பெல்லாம் ஒரு சிறு பொறி போலவும், காற்றானது ஒரு மூச்சுக் காற்று போலவும், ஆகாயமானது சிறிய துவாரம் போலவும் தோற்றமளிக்கிறது...! ருத்திரன், பிரம்மன் போன்ற தேவர்கள் அனைவரும் சிறு புழுக்கள் போலவும் தோற்றமளிக்கின்றனர்...! இப்படிப்பட்ட உனது அளவு கடந்த மகிமையானது வெற்றி கொள்ளட்டும்...!
No comments:
Post a Comment