Holy Trinity

Holy Trinity

Wednesday, March 14, 2012

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த 


//   ஸ்ரீ முகுந்த மாலா   //


ஸ்லோகம் - 20 


பத்தேநாஞ்ஜலினா  நதேன  ஸிரஸா  காத்ரை:  ஸரோமோத்கமை:
கண்டேன ஸ்வரகத்கதேன  நயனேநோத்கீர்ண பாஷபாம்புநாம் /
நித்யம்   த்வத்  சரணாரவிந்த   யுகள   த்யானாம்ருதாஸ்வாதினாம்  
அஸ்மாகம்   ஸரஸீருகாக்ஷ   ஸததம்   ஸம்பத்யதாம்  ஜீவிதம்   //


ஹே தாமரைக் கண்ணா....!  

என்  கைகள்  இரண்டையும்  கூப்பி,  தலை  வணங்கி,  உடல்  மயிர்க்  கூச்சமெடுக்க,  குரல்  தடுமாற,  நா  தழுதழுக்க,  கண்கள்  இரண்டிலும்  நீர்  பெருக்கெடுத்து  ஓட,  உன்னுடைய  திருவடித்  தாமரைகளை  த்யானிப்பது  என்கிற  அம்ருத  ரசத்தை  எப்பொழுதும்  அருந்திக்  கொண்டே   என்னுடைய  வாழ்வு  நிறைவு  பெறட்டும்...! 


(உணர்ச்சிகளே  பக்திக்கு  அடிப்படையாக  உள்ளன...!  ஒரு  பக்தன்,  தன்   உள்ளத்தில்  அன்புடனும்,  அர்ப்பணிப்பு  உணர்வுடனும்  இறை  நிலையில்  ஒன்றி  தொழும்போது,  அவனிடம்  ஏற்படும்  புற மாற்றங்களே  இங்கு  கூறப்பட்டுள்ளன.  ஆழ்வார்கள்,  ஆச்சார்யர்கள்,  ஸ்ரீ சைதன்ய  மஹா  பிரபு,   ஸ்ரீ  ராமகிருஷ்ணர்,  சுவாமி  விவேகானந்தர்  போன்ற  அவதார  புருஷர்களின்  வாழ்விலும்  இவற்றைக்  காணலாம்.  

ஸ்ரீ சைதன்யர்  தன்  'சிக்ஷாஷ்டக' த்தில்  தன்  நிலையை  இவ்வாறு  கூறுகிறார்; 
 
"நயனம்  களத்  அஷ்ரு  தாரயா  வதனம்  கத்கத  ருத்தயாகிரா / 
புலகைர்  நிச்சிதம்  வபு கதா தவநாம க்ராஹணே பவிஷ்யதி // "
 

" இறைவா...!  உன்னுடைய  நாமங்களைக்  உச்சரித்த  மாத்திரத்திலேயே,  என்  கண்களிலிருந்து  தாரை  தாரையாக  கண்ணீர்  பெருக்கெடுக்கிறது;  என் குரலானது தடுமாறுகிறது; என்  உடலெங்கும் மயிர் கூச்சமேடுக்கிறது..!" "  

நம்மாழ்வார்  தன்  'பெரிய  திருவந்தாதி'யில் (34)  கீழ்  கண்டவாறு  கூறுவதையும்  ஒப்பு  நோக்கலாம்;

"பாலாழி  நீ  கிடக்கும்  பண்பையாம்  கேட்டேயும்
காலாழும்  நெஞ்சழியும்  கண்  சுழலும்...."

" ஹே  பரந்தாமா...!   பாற்கடலில்  நீ  பாம்பணையில்  துயிலும்  அழகைக்  கேட்ட  மாத்திரத்திலேயே  என்  கால்கள்  நிலை  கொள்ளாமல்  தள்ளாடுகின்றன;  என்  மனம்  என்  வசம்  இல்லாமல்  உன்னையே  அடைகிறது  (என்  மனத்  துவேஷங்கள்  அகன்று,  நீயே  அதனுள்  துலங்குகிறாய்);  என்  கண்களிரண்டும்  சுழலுகின்றன...! "

No comments:

Post a Comment