ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த
// ஸ்ரீ முகுந்த மாலா //
ஸ்லோகம் - 21
ஹே கோபாலக ஹே க்ருபா ஜலநிதே ஹே சிந்து கன்யாபதே
ஹே கம்சாந்தக ஹே கஜேந்திர கருணா பாரின ஹே மாதவா /
ஹே ராமானுஜ ஹே ஜகத்ரய குரோ ஹே புண்டரீகாக்ஷ மாம்
ஹே கோபி ஜனநாத பாலய பரம் ஜானாமி நத்வாம் வினா //
ஹே கோபாலனே...! ஹே கருணா ஸாகரா...!
ஹே (கடலரசனின் மகளான) மகாலக்ஷ்மியின் மணவாளனே..!
ஹே கம்சனை ஸம்ஹரித்தவனே...!
ஹே கஜேந்திரனை (தன் கருணையால்) ரக்ஷித்தவனே...!
ஹே மாதவா...!
ஹே ராமாநுஜா (பலராமனின் தம்பியான கிருஷ்ணா)...!
ஹே மூவுலகத்திற்கும் ஆச்சார்யனே...!
ஹே தாமரைக் கண்ணா...!
ஹே கோபியர்களின் அன்புக்கு பாத்திரமான கண்ணா...!
உன்னைத் தவிர நான் வேறெதுவும் அறியவில்லை...!
என்னை ரக்ஷித்தருள்வாயாக...!
No comments:
Post a Comment