ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த
// ஸ்ரீ முகுந்த மாலா //
ஸ்லோகம் - 22
பாக்தாபாய புஜங்க காருடமணி: த்ரைலோக்ய ரக்ஷாமணி:
கோபீ லோசந சாதகாம்புதமணி: சௌந்தர்ய முத்ராமணி: /
ய: காந்தாமணி ருக்மிணீ கநகுஜ த்வந்த்வைக புஷாமணி:
ஸ்ரேயோ தேவஸிகாமணிர் திஸது நோ கோபால சுடாமணி: //
பாக்தாபாய புஜங்க காருடமணி: த்ரைலோக்ய ரக்ஷாமணி:
கோபீ லோசந சாதகாம்புதமணி: சௌந்தர்ய முத்ராமணி: /
ய: காந்தாமணி ருக்மிணீ கநகுஜ த்வந்த்வைக புஷாமணி:
ஸ்ரேயோ தேவஸிகாமணிர் திஸது நோ கோபால சுடாமணி: //
ஆயர்
குலத்தின் சூடாமணியாக விளங்கும் கிருஷ்ணன் தன்னுடைய பக்தர்களுக்கு
ஏற்படும் துன்பங்களாகிய பாம்புகளுக்கு 'கருடப் பச்சை' என்ற ரத்தினமாக
இருந்து அவர்களைக் காக்கிறான்...!
மூன்று உலகங்களையும் ரக்ஷிக்கும்
திவ்ய ரத்தினமாகத் திகழ்கிறான்...!
கோப ஸ்திரீகளின் கண்களாகிய சாதகப் பறவைகளுக்கு மேகமாகிய ரத்தினமாக
இருந்து அவர்களின் தாகத்தைத் தீர்க்கிறான்...!
அனைத்து அழகிற்கும்
அடையாளாமான முத்திரை மணியாக ஒளிர்கிறான்...!
மாதர் குலத்தின்
ரத்தினமாக விளங்கும் ஸ்ரீ ருக்மிணீ பிராட்டியின் மார்பை
அலங்கரிக்கும் அழகு மணியாகத் திகழ்கிறான்...!
தேவ தேவியர்களின் மணி
முடியில் விளங்கும் சிகாமணியாக அருள்கிறான்...!
இந்த கோபால
சுடாமணியாகிய 'ஸ்ரீ கிருஷ்ணன்' நம் அனைவருக்கும் அருள் தருவானாக...!
No comments:
Post a Comment