ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த
// ஸ்ரீ முகுந்த மாலா //
ஸ்லோகம் - 24
வ்யாமோஹ ப்ரஸமௌஷதம் முநிமநோவ்ருத்தி ப்ரவ்ருத்யௌஷதம்
தைத்யேந்த்ரார்த்திக ரௌஷதம் த்ரிஜகதாம் ஸஞ்ஜீவநைகௌஷதம் /
பக்த்யாத் யந்த ஹிதௌஷதம் பவ பய ப்ரத்வம்ஸ நைகௌஷதம்
ஸ்ரேயப்ராப்திக ரௌஷதம் பிப மந: ஸ்ரீ க்ருஷ்ண திவ்யௌஷதம் //
ஹே மனமே...!
'ஸ்ரீ கிருஷ்ணன்' என்ற ஔஷதத்தைப் (மருந்தை) அருந்துவாயாக...!
அந்த ஔஷதம் மன மயக்கங்களைப் போக்க வல்லது...!
ரிஷி முனிவர்களின் மனத்தை எப்போதும் இறைவனிடமே ஒன்றி வைத்திருக்கக் கூடியது...!
அசுரர்களுக்கு பெரும் இன்னல்களைத் தரக்கூடியது...!
மூவுலகங்களுக்கும் நன்மை பயப்பது...!
பக்தர்களுக்கு அளவிலா இதத்தைத் தருவது...!
'சம்சாரம்' (பிறவிப் பிணி) என்ற கஷ்டத்தை நீக்குவது...!
நல்லன எல்லாவற்றையும் அளிப்பது...!
No comments:
Post a Comment