ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த
// ஸ்ரீ முகுந்த மாலா //
ஸ்லோகம் - 25
ஆம்நாயா ப்யஸநாந்யண்ய ருதிதம் வேத வ்ரதாந் யந்வஹம்
மேதஸ் சேத பலாநி பூர்த்த விதய: ஸர்வே ஹுதம் பஸ்மநி /
தீர்த்தாநாம் அவ காஹநாநி ச கஜஸ்நாநம் விநா யத் பத -
த்வந்த்வாம்போருக ஸம்ஸ்ம்ருதீர் விஜயதே தேவஸ் ஸ நாராயண: //
பகவான் வெற்றி கொள்வாராக..!
இறைவனின் பாத கமலங்களை ஒரு
சிறிதேனும் மனத்தால் சிந்தனை செய்யாமல், வேத சாஸ்திரங்களைக் கற்பது
என்பது, காட்டிற்குள் சென்று தனியாக புலம்புவதற்கு சமமாகும்...!
வைதீக விரதங்களைக் கடைபிடிப்பது என்பது, உடம்பிலுள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைப்பதற்கு மட்டுமே உபயோகப்படும்...!
தரும காரியங்களான கிணறு தோண்டுதல், குளம் வெட்டுதல் போன்றவை,
நெருப்பிலாமல் வெறும் சாம்பலில் செய்த ஹோமத்திற்கு ஒப்பாகும்...!
கங்கை போன்ற புண்ய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்வது என்பது, ஒரு யானையைக் குளிக்கச் செய்வதற்கு சமமாகும்...!
No comments:
Post a Comment