ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த
// ஸ்ரீ முகுந்த மாலா //
ஸ்லோகம் - 26
ஸ்ரீ மந் நாம ப்ரோச்ய நாராயணாக்யம்
கே ந ப்ராபுர் வாஞ்சிதம் பாபிநோபி /
ஹா ந: பூர்வம் வாக்ப்ரவ்ருத்தா ந தஸ்மின்
தேந ப்ராப்தம் கர்ப வாஸாதி துக்கம் //
ஸ்ரீ மந் நாம ப்ரோச்ய நாராயணாக்யம்
கே ந ப்ராபுர் வாஞ்சிதம் பாபிநோபி /
ஹா ந: பூர்வம் வாக்ப்ரவ்ருத்தா ந தஸ்மின்
தேந ப்ராப்தம் கர்ப வாஸாதி துக்கம் //
'ஸ்ரீ' என்ற மகா லக்ஷ்மியுடன் கூடியதான 'ஸ்ரீ மந்
நாராயணா' என்னும் திவ்யமான திரு நாமத்தை உச்சரித்து, எவர் தான்
பயன் பெறவில்லை..?
பெரும் பாவியும் கூட தான் விரும்பிய பலன்களைப்
பெற்றிருக்கிறான்...!
என் முந்தைய பிறவிகளிலேயே பகவானின் அந்த
திவ்ய நாமத்தைச் சொல்ல வேண்டுமென்று எனக்குத் தோன்றவில்லையே..!
ஐயோ..! அந்த காரணத்தால் தான் எனக்கு கர்ப்ப வாஸம் போன்ற
துக்கமெல்லாம் வந்து விட்டது...!
No comments:
Post a Comment